Sunday, August 1, 2010

ந‌ட்பு!







க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!



முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,

பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,

அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,

உன் அருகாமை இல்லாத‌
பொழுதுகளில் தவித்துப்போனது,

இவையெல்லாம் நடந்தேறிய‌
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!



best friend

உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமைக் காணும்
ஒரு குட்டி இந்தியா என்று




No comments:

Post a Comment