Wednesday, August 4, 2010

உறவுகள் மேம்பட...

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க வேதாத்திரி மகரிஷி அவர்களின் பொன் மொழிகள்
• நானே பெரியவன், நானே சிறந்தவன், என்ற அகந்தையை
(Ego)விடுங்கள்.
• அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள் (Loose Talks)
• எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசு{க்காக கையாளுங்கள் (Diplomacy) விட்டுக்கொடுங்கள்(compromise)
• சிலநேரங்களில் சில சங்கடங்களைச் சிகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (Tolerance)
• உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (Carrying tales).
• அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation).
• எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
• கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
• உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம்தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility)
• மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (Misunderstanding)
• மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறhதீர்கள் (Courtesy)
• புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
• பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
இவ்வாறு வழி நடந்தால் ஒவ்வொரு உறவுகளுமே நம்மை மகிழ்விக்கும்....

No comments:

Post a Comment