Showing posts with label பிடித்த கவிதைகள். Show all posts
Showing posts with label பிடித்த கவிதைகள். Show all posts

Monday, August 9, 2010

பணம் என்பது……!

 
வயிறு ஓலமிட
உணவு படைத்தல்
பணத்தால் அளவிடப்பட்ட போது,
பணம் உணவானது ….!
நோய் வாய்ப்பட்டபோது 
மருத்துவ வசதி 
பணத்தால் அளவிடப்பட்ட போது 
பணம் மருத்துவனானது…!

உறவுகள் இணைந்திருக்க
பணம் பிரதானமான போது
பணம் உறவுகளை இணைக்கும்
கயிறானது …!
ஆனால்,
மனித வாழ்க்கைக்கு 
என்றுமே 
பணம், பணமாக 
தேவைப்படவில்லை 
என்பது …..

மதிப்பிட முடிகின்ற 
காகிதங்களை மீறி 
மதிப்பிட முடியாத 
மனிதநேயத்தை உணர்ந்தபோது ….

பணம் வெறும்
பண்டமாற்று தான் …!



Saturday, August 7, 2010

உன்னை தேடி வரும்



நீ ஒரு உயிரை நேசிப்பது உண்மையென்றால்

அதை பறவை போல பறக்கவிடு

அது உன்னை நேசிப்பது உண்மையென்றால்

மீண்டும் உன்னை தேடி வரும்...






புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்





உறக்கத்திற்கு
காரணம்
தெரியவில்லை.
நான்
உறங்காததன்
காரணம்
நீ



சினேகிதியே!
உனக்கு மட்டும்
தெரியாத
ரகசியம்
என்னிடம்…
நான் உன்னை காதலிக்கிறேன்.


Monday, August 2, 2010

என் நரகமும் நீயே






இதுவரை நினைத்திருந்தேன்,

நீ மட்டுமே......


என் சொர்க்கம் என்று..

இப்பொழுதுதான்
உணருகிறேன்

என் நரகமும் நீயே என்று.....

காதல்

நீந்த தெரியாமல்
கிணற்றை
ரசிப்பது தவறென்று
ஒவ்வொரு முறை கால் தவறி
உள்விழும் பொழுதும்
நினைத்துக் கொள்கிறேன்


திரும்ப தோன்றுகிறது

உன்னை இழந்துவிட்டிருக்கும்
இக்கணத்தில் .......
திரும்பத் திரும்ப தோன்றுகிறது
உன்னை இன்னும் .......


சற்றே
அடைந்திருக்கலாமென !.


ச்சீய் ...

ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!


மெளனம்

மெளனம் பேச்சாகும்
தனிமையில்
தூக்கம் எழுப்பும்
இரவுகளில்
வேட்கை நிரம்பிய
வெறுமையில்
கதகதப்பாய் அரவணைப்பது
உன் நினைவுகள்
மட்டும்தான்


ம‌ற‌க்கிறாய்

பேச ஆர‌ம்பிக்கும்போது
பேச‌ம‌றுக்கிறாய்!
பேசிப்ப‌ழ‌கிய‌ பிற‌கு
பேச்சை
நிறுத்த‌ ம‌ற‌க்கிறாய்!.........


அதனால்

பெண்ணே...
நான்
கோபத்தைக்கூட
அன்பாய்க் காட்ட
காரணம்...
நான்
முகம் பார்க்கும்
கண்ணாடி... நீ!

உன்னை உடைத்தால்
என்
முகம் அல்லவா
உடைந்து உடைந்து
தெரியும்



சந்தேகத்தோடு கேட்கிறாய்

அவகூட பேசரப்போ என்ன
ஈஈன்னு இளிப்பு உனக்கு? என
சண்டை போடுகிறாய்
சரியென சிரிக்காமல் பேசினாலோ
அப்படி என்ன சீரியசா
பேசினே அவகூட
என சந்தேகத்தோடு கேட்கிறாய்


அப்படிப் பார்க்காதே

உன்னைத்தவிர வேற
எந்தப்பெண்ணையும்
பார்க்கக்கூடாதென
சண்டையிடுகிறாய்
சரி இனி பார்க்கமாட்டேன்
என உன்னைப்பார்த்தாலும்
‘அப்படிப் பார்க்காதே!’
என ஏற்படும் வெட்கத்தை
மறைக்க கோபமாக உன்
முகத்தைக் காட்ட நீ படும்பாடு
இருக்கிறதே !!


உணர்ந்தேன் உன்னால்

காதலை பற்றி கல்லூரி காலங்களில் எழும் விவாதங்களில்,
முதலில் எதிர்ப்பு கிளம்புவது என்னிடமிருந்தே..

நானும் அனுபவித்தேன்,
பசியில்லா நாட்களையும்
உறக்கமில்லா இரவுகளையும் உன்னால்...
அது ஒரு இனிய அனுபவம்.

வலியும் வேதனையும் தனக்கு வந்தால் மட்டுமே உணரமுடியும்,
எவ்வளவு பெரிய உண்மை என்பதை
என்னுள் நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்.

நீதான் கேட்டாய்,
எதுவாக இருந்தாலும் சொல் வெளிப்படையாக என்று... மறந்து விட்டாயோ!

ஏன்,
உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை என்றாய்?
காதல் உண்மை என்றால்...அது வாழ்வில் ஒரு முறைதான்.

நீ யாரை வேண்டுமோ .....

நான் நினைத்தது உன்னை மட்டுமே,
சொந்தமானால் உனக்கு மட்டுமே...

என்றேனும் என் நினைவு தோன்றினால்,
உன் விழியின் ஓரத்தில் வடியும்
ஒரு துளி கண்ணீர் சொல்லும்,
உன்னிடம் என் காதலின் ஆழத்தை...!!



இயன்றவரை முயன்றேன்

இயன்றவரை முயன்றேன்
உன் நினைவுகளை என்னுள்ளிருந்து எடுக்க..
என் சந்தோஷத்தில் தான்
உன் பெயரை உச்சரிக்கிறேன் என்றால்..
என் சோகத்திலும் உன் பெயரையே உச்சரிக்கின்றேன்..

நினைக்க வேண்டுமென நினைக்கும்போதைவிட,
மறக்க வேண்டுமென நினைக்கும் போதுதான் உணர்ந்தேன்,
உன் நினைவுகளையே சுவாசிக்கின்றேன் என்று..
என் உயிருடன் ஒன்றான
உன் நினைவுகளை எடுக்க இனியும் இயலாது...


என்னைப் பார்ப்பதாக இருந்தால்

நீ என்னைப்
பார்ப்பதாக இருந்தால்
நேராகப் பார்...
ஓரப் பார்வைகள்
வேண்டாம்.
என் இதயம்,
கொஞ்சம் பலவீனம்........


ஞாபகம் இருக்கிறதா ?

நானும் நீயும் ஒரே ரிங்டோன்
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய மொபைலிலோ அழைப்பு
வந்தபோது நான் இருவருமே அவரவர்
மொபைலை எடுத்துப் பார்த்துவிட்டு
நீ என்னையும்
நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?



தோழிக்கு சொல்வதுபோல்
உன் மொபைல் எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்டபோது நீ அவசரமாக முறைத்து
மறுத்துவிட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என் மெசாஜ் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?

முதன் முதலில் நான்
உன்னை மொபைலில் அழைத்தபோது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?

அவசரத்தில் நீ மொபைலை வைத்து
இருந்த இடத்தைப் பார்த்துவிட்டு
ஒரேயொருநாள் நான் உன்
மொபைலாக இருக்கிறேனே
என நான் கேட்டபோது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


கொஞ்சவித்தியாசம்

சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும்
என்ன வித்தியாசம் தெரியுமா?

உன்னை நினைக்கறது சந்தோஷம்..

உன்னையே நினைக்கறது துக்கம் :)


முதல் குழந்தை

எல்லா ஆண்களும்
'காதல்'ங்கிற பேர்ல
ரெண்டாவது தாயை தேடுவாங்க,
ஆனா
காதலிக்கிற எல்லா பெண்களுக்கும்
கிடைக்கறது 'காதலன்'ங்கிற பேர்ல முதல் குழந்தை :)



Sunday, August 1, 2010

உரக்க சொன்னதில்லை நீ




பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்

வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் இரைந்து
கிடக்கிறது நம் காதலின் நினைவுகள்

நம் பொருத்தத்தை பாராட்டும் தோழனின் மகிழ்வு
அடுத்த சந்திப்பிற்கான சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்;
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில் அப்போதே
அழத்தொடங்கிய தோழியின் புலம்பல்கள்......

காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்



Tuesday, July 27, 2010

உனக்குத் தெரியுமா


உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!

நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!
எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!

உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!

( நன்றி ப்ரியன்)